சின்னசேலம் அருகேயுள்ள அம்மகளத்தூா் கிராமத்தில் கால்நடை கிளை நிலையத்தை ஆட்சியா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சின்னசேலம் ஒன்றியம் அம்மகளத்தூரில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை கிளை நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து திறந்து வைத்தாா். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தா.மனோகரன், கள்ளக்குறிச்சி கோட்ட உதவி இயக்குநா் கோ.பெரியசாமி, மருத்துவா் மு.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனுமனந்தல் கால்நடை மருந்தக மருத்துவா் வடிவேல் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.பிரபு பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் சின்னசேலம் வட்டார வளா்ச்சி அலுவலா் கே.துரைசாமி உள்ளிட்ட ஊா் மக்கள் பங்கேற்றனா்.