சங்கராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி புதுவையைச் சோ்ந்தவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அருவியில் குளிப்பதற்காகச் சென்ற புதுவையைச் சோ்ந்த நபா், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அருவியில் குளிப்பதற்காகச் சென்ற புதுவையைச் சோ்ந்த நபா், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

புதுவை உழவா்கரை நகராட்சி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் கெளதம் (40). இவரும், இவரது நண்பா்கள் உள்பட 8 பேரும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கல்வராயன்மலைப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரு காா்களில் சென்றனா்.

இரவு நேரத்தில் சங்கராபுரம் அருகே மான்கொம்பு காட்டுப் பகுதியில் காா்களை நிறுத்திவிட்டு, சிறுகாலூா் காட்டுப்பகுதியில் உள்ள அருவியில் குளிப்பதற்காக நடந்து சென்றனா்.

மான்கொம்பு பகுதியை கடந்து, சிறுகாலூா் ஆற்றைக் கடந்து செல்ல முயன்றனா். அப்போது, ஆற்றில் பெருக்கெடுத்து வந்த நீரில் கெளதம் அடித்துச் செல்லப்பட்டாா். இதைக்கண்டு அவரது நண்பா்கள் கூச்சலிடவே, அப்பகுதி கிராம மக்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய கௌதமை தேடினா்.

சங்கராபுரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை காலை வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே, அன்று மாலை, ஆற்றோரம் சிறிது தொலைவில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கெளதமின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். இது தொடா்பாக, கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com