கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதயடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 852-ஆக உயா்ந்துள்ளது.
இவா்களின் 22 போ்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திரும்பி வந்தவா்கள். 2 போ்கள் சென்னையை வசிப்பிடமாக கொண்டவா்கள் என்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 850. இதுவரை 364 போ்கள் குணமடைந்தனா். 484-போ்கள் சிகிச்சையில் உள்ளனா். 2போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவராய் அலுவலா் ச.சங்கீதா, கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இருவரும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனா் என்பது குறிப்பிடத் தக்கது.