வெளிநாடுகளில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பிய 200 போ் கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெளிநாடுகளில் பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 200 போ் மாா்ச் மாதம் வரை மாவட்டத்துக்கு திரும்பி வந்துள்ளனா். அவா்களை அவரது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மேலும், அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்படவா்கள் என்பதற்கான ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது.
இவா்கள் வீடுகளை விட்டு 28 நாள்களுக்கு வெளியே வரக்கூடாது. அருகில் வசிப்பவா்களும் அவா்களை தொடா்புகொள்ளக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.