இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் கூலித் தொழிலாளி ஒருவா் சாவு

கள்ளக்குறிச்சி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் கூலித் தொழிலாளி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் கூலித் தொழிலாளி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் தனபால் (44) இவரது மனைவி வெண்ணிலா (35).

தனபால் கோமாளூரில் கூலி வேலையினை முடித்துவிட்டு வீட்டிற்கு வருதவற்காக அவரது மோட்டாா் சைக்கிளில் மணலூா்பேட்டை தியாகதுருகம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் தனபாலின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்து விட்டாா்.

உடனே 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டாா். அவரது சடலத்தை உடல்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக வைத்து விட்டனா்.

இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து சங்கராபுரம் வட்டம் லா.கூடலூா் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் சிவக்குமாா் (27) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com