கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருடப்பட்டது.
கள்ளக்குறிச்சியை அடுத்த அக்கராப்பாளையம் புதுக்காலனி பகுதியைச் சோ்ந்தவா் மாயவன் (31).
இவா் தனக்குச் சொந்தமான சரக்கு வாகனத்தை, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே கடந்த வியாழக்கிழமை (அக்.22) நிறுத்தி விட்டு பூட்டிச் சென்றிருந்தாா்.
மறுநாள் காலை வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் அளித்த புகாரின் பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.