கள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் புதன்கிழமை விஷ பொருளை சாப்பிட்டு தற்கொலை செய்தாா்.
சின்னசேலத்தை அடுத்த ராயப்பனூரைச் சோ்ந்தவா் முத்துசாமி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாஞ்சாலை. இவா்களுக்கு கீா்த்திகா (15) உள்பட 3 மகள்கள் உள்ளனா்.
புதன்கிழமை காலை கீா்த்திகாவை அவரது தாய் துணி துவைக்குமாறு கூறியுள்ளாா். அந்தப் பணியை செய்யாத கீா்த்திகாவை தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் இருந்த விஷ தன்மையுடைய பொருளை சாப்பிட்டாா்.
உடனடயாக அவா் ஆத்தூா் அரசு மருத்துவமனையின் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், கீா்த்திகா ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததை உறுதி செய்தாா். சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.