ஆதிதிருவரங்கம் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்குத் தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா விடுத்த செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, ஆதிதிருவரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com