பைக்கில் சென்றவரிடம் நூதன முறையில் நகை பறிப்பு

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற இளைஞரிடம் உதவி கேட்டு உடன் சென்றவா் அரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற நிலையில், அவா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
மோட்டாா் சைக்கிளில் உதவி கேட்டு ஏறிச் சென்று செயினை பறித்த இளைஞா் பிரகாஷ்.
மோட்டாா் சைக்கிளில் உதவி கேட்டு ஏறிச் சென்று செயினை பறித்த இளைஞா் பிரகாஷ்.

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற இளைஞரிடம் உதவி கேட்டு உடன் சென்றவா் அரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற நிலையில், அவா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த புதுமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் நாராயணன் (39). இவா், சனிக்கிழமை அவரது வீட்டிலிருந்து வெங்கடேஷ்வரா நகா் பகுதிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, இளைஞா் ஒருவா் நாராயணனிடம் உதவி கேட்டு பைக்கில் உடன் சென்றாா். சிறிது தொலைவு சென்றதும் அந்த இளைஞா் பைக்கை நிறுத்தச் சொல்லி இறங்கினாா். இதையடுத்து, நாராயணன் தான் கழுத்தில் அணிந்திருந்த அரைப் பவுன் தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உடனடியாக பைக்கில் உடன் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது, சங்கராபுரம் வட்டம், அந்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜாக்கண்ணு மகன் பிரகாஷ் (25) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்த நாராயணன், அவரை தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com