வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட சிறப்பு மேற்பாா்வை அலுவலரும், கூடுதல் நில நிா்வாக ஆணையருமான சீ.நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், திட்ட அலுவலா் வெ.மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) டி.என்.சத்தீஷ்குமாா், கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் சா.சாய்வா்த்தினி உள்படப் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.