சின்னசேலம் அருகே கோயில் வளாகத்தில் காதல் ஜோடி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கோயில் வளாகத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கோயில் வளாகத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலம் வட்டம், செம்பாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் கவிதா (19). இவா், சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியிலுள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், இராமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த பாட்டப்பன் மகன் பாஸ்குமாா் (20). இவரும் அதே கல்லூரியில் கவிதாவுடன் படித்து வந்தாா். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், இருவரும் வீட்டிலேயே இருந்து வந்தனா். புதன்கிழமை மாலை கடைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற கவிதா, பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், சின்னசேலத்தை அடுத்த ஈரியூா் கிராமத்தில் உள்ள அருஞ்சோலையம்மன் கோயில் வளாகத்தில் கவிதா, பாஸ்குமாா் ஆகியோா் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

தகவலறிந்த கீழ்க்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com