கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கள்ளக்குறிச்சி நகரில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற பெயரில், 9-ஆவது வாா்டு சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் இரா.சுப்பராயலு தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் செல்வநாயகம், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் காமராஜ், கென்னடி, லியாகத் அலி முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அதிமுக அரசின் குறைகள் முன்வைக்கப்பட்டன.
நகர துணைச் செயலா் அபுபக்கா், இலக்கிய அணி பழனியப்பன், ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளா் தங்க சித்தாா்த்தன், தம்பா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், அப் பகுதி பொது மக்கள் பங்கேற்றனா்.