தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் செந்தில் (எ) இளநீா் செந்தில் (39). சாராய வியாபாரியான இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது தொடா் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, சாராய வியாபாரி செந்திலை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்கினா்.