திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, கெங்கவல்லி, ஆத்தூா் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வருகிற 23-ஆம் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. கல்விக் குழும வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில், சென்னையில் இருந்து சுமாா் 35-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், பொறியியல், டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம், ஐடிஐ படித்த இளைஞா்கள், இளைஞிகள் பங்கேற்று பயன் பெறலாம் என கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கெளதம சிகாகமணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தெற்கு மாவட்ட திமுக செயலா் ஆ.அங்கையா்கண்ணி, சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தா.உதயசூரியன், மாவட்ட அவைத் தலைவா் கே.ராமமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் பி.காமராஜ், கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலா்கள் சி.வெங்கடாசலம், எஸ்.பி.அரவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.