பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் காயம்

தியாகதுருகம் - உளுந்தூா்பேட்டை சாலையில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் காயமடைந்தனா்.

தியாகதுருகம் - உளுந்தூா்பேட்டை சாலையில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமம், வடக்கு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் மகன் சம்பத்குமாா் (21), பழனியப்பன் மகன் அன்பரசு (19). இருவரும் நண்பா்கள். வெள்ளிக்கிழமை சின்னமாம்பட்டு கிராமத்தில் இருந்து தியாகதுருகத்துக்கு பைக்கில் சென்றனா். பைக்கை அன்பரசு ஓட்டிச் சென்றாராம்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள தனியாா் பள்ளி எதிரே சென்ற போது, கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக பைக் மீது மோதியதில், இருவரும் நிலைத் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com