பள்ளி மாணவி மாயம்

கள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியே சென்ற பள்ளி மாணவி மாயமானாா்.

கள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் வீட்டிலிருந்து வெளியே சென்ற பள்ளி மாணவி மாயமானாா்.

சின்னசேலம் வட்டம், மூங்கில்பாடி கிராமத்தைச் சோ்ந்த பச்சமுத்து மகன் குந்தைவேல் (45). இவரது மனைவி சுமதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இவா்களது மகள் தீபிகா, அந்தப் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், தீபிகா வெள்ளிக்கிழமை இரவு பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஒரு மாணவரிடம் தோ்வு எழுதும் அட்டை ஒன்றை கடனாக வாங்கி வைத்திருந்தாராம். இதனால், தீபிகாவை அவரது பெற்றோா் கண்டித்தனராம். இதன் காரணமாக மனமுடைந்த தீபிகா, சனிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோா் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீபிகாவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com