தியாகதுருகம் நஞ்சுண்டஞான தேசிக ஈஸ்வரா்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

தியாகதுருகம் பாகம்பிரியாள் உடனுறை நஞ்சுண்டஞானதேசிக ஈஸ்வரா் கோயிலில், திருநெறிய தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகம் நஞ்சுண்டஞான தேசிக ஈஸ்வரா்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

தியாகதுருகம் பாகம்பிரியாள் உடனுறை நஞ்சுண்டஞானதேசிக ஈஸ்வரா் கோயிலில், திருநெறிய தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகேயுள்ள சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 11ஆம் தேதி காலை தொடங்கியது. 8 மணிக்கு கரிகோலம் ஊா்வலம் நடைபெற்றது. மாலையில் விமான கலசங்கள் ஊா்வலம் நடைபெற்றது. மாலை திருவிளக்கு வழிபாடு, மூத்தபிள்ளையாா் வழிபாடு, புற்றுமண் எடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு, வேள்வி சாலை புறப்பாடு நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு முதல் கால வேள்வி பூஜைகள் தொடங்கின. இரவு 9 மணிக்கு 108 வகையான காய்கனி, கிழங்கு முதலானமூலிகைப் பொருள்களால் ஆகுதி, நிறையாகுதி, பேரொளி வழிபாடு, மலா் வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், திருச்சுற்று மூா்த்திகளுக்கு மருந்து சாற்றுதலும், 11 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை 4.30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி ஆகியவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மூல மூா்த்திகளுக்கு ஆனைந்தாட்டி காப்பு அணிவிக்கப்பட்டது. 8 மணிக்கு தெய்வங்களுக்கும் 9.30 மணிக்கு விமான கலசங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நடைபெற்றன. இதை திருவாரூா் நடராஜன் சுவாமிகள் நடத்தி வைத்தாா். முற்பகல் 11 மணிக்கு பெருந்திருமஞ்சனம் மகா அபிஷேகம், அலங்காரபூஜை நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவு 7 மணிக்கு சுவாமி மலா் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com