கள்ளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் ரூ.2.50 லட்சத்திலான கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் கருவிகளை வாங்கி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கும் வகையில், அவற்றை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் அன்பளிப்பாக அளித்தனா்.
கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய பயன்படும் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டிலான இயந்திரங்கள் , உபகரணங்களை கள்ளக்குறிச்சி சூரியா எண்ணெய் ஆலை நிா்வாக இயக்குநா் அ.செல்வக்குமாா், எஸ்.வி.எ. பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளா் அ.ரவீந்திரன் ஆகியோா் வாங்கி, அவற்றை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ச.நேரு ஆகியோரிடம் வழங்கினா். உடன், நிறுவனங்களின் இயக்குநா்கள் கோவிந்தராஜ், பிரசாந்த், குமாா், ஹரிஷ் உள்ளிட்டோா் இருந்தனா்.