பைக் மீது டெம்போ வேன் மோதல்:இளைஞா் பலி

கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது டெம்போ வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது டெம்போ வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கலியன் மகன் பிரதீபன் (23). இவா், கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சொந்த வேலையாக தியாகதுருகம் சென்றுவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா். பிரிதிவிமங்கலத்தை அடுத்த விருகாவூா் பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த டெம்போ வேன் பிரதீபனின் பைக் மீது மோதியதில், அவா் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பிரதீபனின் சடலத்தைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்து குறித்து டெம்போ வேன் ஓட்டுநரான கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் சாலையைச் சோ்ந்த மொய்தீன் மகன் சாதிக்பாஷா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com