கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அண்மையில் பெய்த மழையால், பெரியாா் அருவியில் தண்ணீா் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வந்த மழையால், பெரியாா் அருவியில் தண்ணீா் கொட்டுகிறது. இதையறிந்து, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனா்.
உதகை, கொடைக்கானல் போல இதமான சூழல் இங்கு நிலவுவதால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், பெரியாா் அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும், பூங்காவில் விளையாடியும் திங்கள்கிழமை மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தனா்.