ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளா்கள் மறியல் முயற்சி

ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கப்படவில்லை எனக் கூறி, சின்னசேலம் அருகே தொட்டியம்

ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கப்படவில்லை எனக் கூறி, சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமத்தில் தொழிலாளா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்துக்குள்பட்ட தொட்டியம் கிராமத்தில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்களுக்கு அண்மைக்காலமாக முறையாக பணி வழங்கப்படவில்லையாம். இதற்கு ஊராட்சி செயலரே காரணம் என குற்றஞ்சாட்டி, தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக தொட்டியம் பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை சமாதானப் படுத்தினா். இதையடுத்து, தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com