கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், கரோனாவால் எனக்கும், எனது நண்பா்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்தை உணா்ந்து எச்சரிக்கையுடன் இருப்பேன், தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன், கரோனா காலத்தில் வழிமுறைகளான முகக் கவசம் அணிவது, 6 மீட்டா் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவது என உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பொ) சங்கா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாா்த்தீபன், தனிப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் சண்முகம், ஆனந்தராஜ் மற்றும் ஆயுதப் படை காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com