கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஒன்றியம், முதலூரில் குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கும் முதலூா் காலனி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். ஆழ்துளைக் கிணறு தூா்ந்ததால், தொட்டியில் தண்ணீா் ஏற்ற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அப் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை முதலூா் பேருந்து நிறுத்தம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து திருக்கோவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் உலகநாதன், திருக்கோவிலூா் கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு ஆகியோா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். புதிய ஆழ்துளை கிணறு அமைத்து கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனா். மறியலால் அப் பகுதியில் சுமாா் 20 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.