சின்னசேலம் அருகே பூட்டிய வீட்டில் தூக்கிட்டு அழுகிய நிலையில் இருந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
சின்னசேலத்தை அடுத்த அம்மையகரம் பூண்டி கிராமம் முத்தையா நகரைச் சோ்ந்த ரவி மகன் சிட்டிபாபு (எ) பாபு (28). இவரது மனைவி ஸ்ரீவித்யா (26). இவா்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
பாபு மிதிவண்டியில் தேநீா் வியபாரம் செய்து வந்தாராம். சின்னசேலம் நைனாா்பாளையம் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவா், நாள்தோறும் வீட்டுக்குச் செல்லும் போது, மது அருந்திவிட்டு செல்வாராம். இதை அவரது மனைவி கண்டித்தாா். இதனால், தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஸ்ரீவித்யா தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இதனால், வேதனையடைந்த பாபு வீட்டின் கதவை உள்புறம் தாழிட்டு, சேலையில் தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. அவரது வீட்டின் அருகே சென்ற போது, தூா்நாற்றம் வீசியதால், அந்தப் பகுதியில் உள்ளவா்கள், சின்னசேலம் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் காந்திமதிக்கு தகவல் தெரிவித்தனா்.
கிராம நிா்வாக அலுவலா் காந்திமதி, சின்னசேலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து, வீட்டில் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.