திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஜி.கே.ராஜூ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். புதிதாகப் பொறுப்பேற்ற காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு திருக்கோவிலூா் உள்கோட்டக் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.