கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீழையூரைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மகன் தமிழ்ச்செல்வன் (31). கடந்த மாதம் திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பிறப்பித்த உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வனை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.