கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், நிலம் குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்றுநா் சீா்திருத்தத் துறை பணியாளா் இணைச் செயலாளா் (ஓய்வு) கிருஷ்ணகுமாா் அண்ணா மேலாண்மை நிலையம் சாா்பில் பயிற்சி அளித்தாா். அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.