கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள 21 வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்தத் தொகுதிக்கு உள்பட்ட தென்கீரனூா், மலைக்கோட்டாலம், பொரசக்குறிச்சி, பானையங்காள், விருகாவூா், சித்தலூா், புக்குளம், தியாகதுருகம், மாடூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வாக்குச் சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகளை பாா்வையிட்ட சந்திரசேகா் வாலிம்பே, கடந்த தோ்தலின் போது பதற்றமான சம்பவங்கள் நடைபெற்றனவா எனவும் கேட்டறிந்தாா். வாக்குச் சாவடி மையத்தின் முன்புறம் பூத் எண்ணை பாா்வையிட்டு அவா், அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.