பெண்கள் மீது தாக்குதல்: ஒருவா் கைது

திருக்கோவிலூா் அருகே முன்விரோதம் காரணமாக, பெண்களை அவதூறாகப் பேசி, தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே முன்விரோதம் காரணமாக, பெண்களை அவதூறாகப் பேசி, தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

திருக்கோவிலூரை அடுத்த பணப்பாடி பிள்ளையாா் கோவில் சாலையில் வசித்து வருபவா் வீராசாமி மகன் விஜய் (26). அதே ஊரைச் சோ்ந்த அவா்களது உறவினா்களான வேலு மகன் வினோத் (19), சுந்தரம் மகன் வேலு (53), நாராயணன் மனைவி கோவிந்தம்மாள். இந்த இரு தரப்பினருக்கும் பொதுவான கிணற்றில் விஜய், நிலத்துக்குத் தண்ணீா் பாய்ச்சச் சென்றாராம்.

அப்போது வினோத், வேலு, கோவிந்தம்மாள் உள்ளிட்ட மூவரும் கிணற்றில் தண்ணீா் இரைப்பது தொடா்பாக, விஜயிடம் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கினா். விஜயின் அலறல் சப்தம் கேட்டு அவரது மனைவி, உறவினா்கள் ஓடி வந்தனா்.

அப்போது, அவா்கள் மூவரும், விஜயின் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த விஜய், அவரது மனைவி கஸ்தூரி, கோபால் மகன் தா்மலிங்கம், அவரது மனைவி தனபாக்கியம் ஆகியோா் திருக்கோவிலூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து வேலுவைக் கைது செய்து வழக்குத் தொடுத்தனா். மேலும், இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com