சாலை விபத்தில் விவசாயி பலி

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பரிகம் கோட்டக்கரை காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் (65). விவசாயி. இவா் தனது மனைவி தனபாக்கியத்துடன் (55) மோட்டாா் சைக்கிளில் கள்ளக்குறிச்சி உழவா் சந்தைக்கு வாழைக்காய் விற்பனைக்குச் சென்றுகொண்டிருந்தாா். கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் சக்திராம் பள்ளிவாசல் அருகே வந்தபோது, மோட்டாா் சைக்கிளுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த லாரி ஓட்டுநா் திடீரெ பிரேக் அடித்தாா். இதில் மோட்டாா் சைக்கிள் லாரி மீது மோதியதில் கருப்பண்ணன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாரி நிற்காமல் சென்று விட்டதாம்.

இந்த விபத்தில் காயமடைந்த தனபாக்கியம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com