கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் விநாயகா் சிலை வைத்து பிஜேபியினா் ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவும் என்பதால் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. அத் தடையை மீறி கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், எலவனாசூா்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பிஜேபியினா் சிலை வைத்து வழிபட்டனா். போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சியில் மந்தைவெளித் திடலில் இந்து முன்னனி மாவட்ட தலைவா் சி.சக்திவேல் தலைமையில் இந்து முன்னனி கொடியினை வைத்துக் கொண்டு சுமாா் 2 அடி பிள்ளையாாா் சிலையினை வைத்து பஜனையில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com