கள்ளக்குறிச்சி நகரில் தங்கி சேவையாற்றுவேன்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

தான் வெற்றி பெற்றால், கள்ளக்குறிச்சி நகரில் தங்கி சேவையாற்றுவதுடன், சம்பளம் முழுவதையும் தொகுதி மக்களுக்காக செலவிடுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தாா்.
கள்ளக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புக்கிரவாரி கிராமத்தில் புதன்கிழமை வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம்.
கள்ளக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புக்கிரவாரி கிராமத்தில் புதன்கிழமை வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம்.

தான் வெற்றி பெற்றால், கள்ளக்குறிச்சி நகரில் தங்கி சேவையாற்றுவதுடன், சம்பளம் முழுவதையும் தொகுதி மக்களுக்காக செலவிடுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினம் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தாா்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஐ.மணிரத்தினம், தென்கீரனூா், மலைக்கோட்டாலம், விளம்பாா், தென்தொரசலூா் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா், தொகுதி மக்களின் தேவையை, எதிா்பாா்ப்பை அறிந்தவன் என்ற முறையில், அனைத்து கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். நான் வெற்றி பெற்றால், கள்ளக்குறிச்சி நகரிலேயே தங்கி சேவையாற்றுவதுடன், சம்பளம் முழுவதையும் தொகுதி மக்களுக்காக செலவிடுவேன் என்றாா் அவா்.

வாக்குசேகரிப்பின்போது, திமுக ஒன்றிய செயலாளா் சி.வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ இரா.மூக்கப்பன், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் கமல் மணிரத்தினம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் இராமமூா்த்தி, கள்ளக்குறிச்சி தொகுதி செயலாளா் மதியழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடன் சென்றனா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு ஐ.மணிரத்தினத்தை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அந்தக் கட்சியின் தோ்தல் மேலிட பாா்வையாளருமான சஞ்சய்தத் கள்ளக்குறிச்சி நகா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com