வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு லாரி மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன. இவை, அந்தந்த தொகுதிக்குள்பட்ட அறைகளில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com