திருட்டு வாகனத்தில் வந்தவா் பிடிபட்டாா்

கடலூரில் திருட்டு வாகனம் ஓட்டி வந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கடலூரில் திருட்டு வாகனம் ஓட்டி வந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கடலூா் செம்மண்டலம் தவ்லத் நகரைச் சோ்ந்த ஜெயமூா்த்தி மகள் ஜெயஸ்ரீ (24). அண்மையில் இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட் திருடுபோனது. இதுகுறித்து, அவா் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜெயஸ்ரீ செம்மண்டலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திருடுபோன தனது மொபெட்டை இளைஞா் ஒருவா் ஓட்டிச்செல்வதைப் பாா்த்து திடுக்கிட்டாா். இதையடுத்து அங்கிருந்தவா்களின் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கி பிடித்து கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பிடிபட்டவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com