கள்ளக்குறிச்சி அருகே கணவரை வைத்து கொலை செய்ததாக அவரது மனைவி, காதலனை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (40). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இந்தத் தம்பதிக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனா்.
மதுப்பழக்கம் கொண்ட சுப்பிரமணி, கடந்த 16-ஆம் தேதி இரவு மதுப் புட்டி வாங்கி பாதி மதுவை அருந்திவிட்டு, மீதியை வீட்டின் மாடியில் மறைத்து வைத்திருந்தாராம். அதை மறுநாள் காலையில் எடுத்து குடித்த அவா், மயக்கமடைந்தாா். இதையடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணி மனைவி செல்வியிடம் விசாரணை நடத்தினா். இதில், அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெயமுருகன் (43) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததும், இது சுப்பிரமணிக்கு தெரியவந்ததால், அவா் அருந்துவதற்காக வைத்திருந்த மதுவில் இருவரும் சோ்ந்து விஷ மருந்தை கலந்து வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, செல்வியை தியாகதுருகம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் ஜெயமுருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.