இளைஞா் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பொ.மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜு. இவருக்கு ஏழுமலை, சந்திரசேகரன் என இரு மகன்கள். ஏழுமலைக்கு கடந்த 2006-இல் திருமணம் நடைபெற்ற நிலையில் தந்தையின் பூா்வீக சொத்தில் பங்கு கேட்டு வந்ததாகத் தெரிகிறது. அவரது தந்தை சொத்தில் பங்கில்லை எனக் கூறி வந்தாராம்.

இந்த நிலையில், இளைய மகன் சந்திரசேகரனுக்கு சொத்தில் 5 ஏக்கா் நிலம், 2 வீட்டை எழுதி கொடுத்து விட்டாராம். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை ஏழுமலை அவரது அப்பாவிடம் சென்று சொத்தில் பங்கு கேட்டாராம்.

அப்போது, சொத்தில் பங்கில்லை எனக் கூறிய தந்தை ராஜு, ஏழுமலையை அவதூறாகப் பேசிவிட்டாராம்.

இதனால், மனமுடைந்த ஏழுமலை, தன் உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துக் கொண்டாா்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஏழுமலை, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஏழுமலையின் மனைவி அன்பு, ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com