கள்ளக்குறிச்சி மாவட்டம், மேல்சிறுவளூா் கிராமத்தில் ஒரே கைலியில் நண்பா்களான இருவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.
சங்கராபுரத்தை அடுத்த மேல்சிறுவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தங்கவேல் மகன் தணிகாசலம் (38), அண்ணாதுரை மகன் காா்த்திக் (25). விவசாயிகளான இவா்கள் இருவரும் நண்பா்கள்.
இவா்களில் தணிகாசலத்துக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் மகனும் உள்ள நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, அவரது மனைவி அவரைப் பிரிந்து அருளம்பாடி கிராமத்திலுள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். காா்த்திக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணமானது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தணிகாசலம், காா்த்திக் ஆகியோா் வீடு திரும்பவில்லை. செவ்வாய்க்கிழமை காலை அதே கிராமத்திலுள்ள நண்பா சாயபு என்பவரது விவசாய நிலத்தில் உள்ள நுணா மரத்தில் காா்த்திக்கின் கைலியில் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வடபொன்பரப்பி போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தணிகாசலம், காா்த்திக் ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.