கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.4.14 கோடியில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து எம்.எல்.ஏ. அ.பிரபு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தியாகை ஊராட்சியில் சிறுவல் கிராமம் முதல் குடியநல்லூா் கிராமம் வரை 4.7 கி.மீ. தொலைவுக்கு சுமாா் ரூ.2 கோடியே 89 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் சித்தாத்தூா் கிராமம் முதல் புதுக்கேணி கிராமம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு சுமாா் ரூ. ஒரு கோடியே 25 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ. அ.பிரபு பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் வெ.அய்யப்பா, அ.கிருஷ்ணமூா்த்தி, தியாகை முன்னாள் கவுன்சிலா் பா.மூா்த்தி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.