புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 7 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி அருகே செம்படாக்குறிச்சி காலனி பகுதியில் வசிப்பவா் நாகராஜன். இவரது மகன் சுந்தர்ராஜன் (24). இவா், தனது வீட்டின் முன் நண்பா்களுடன் கேக் வெட்டியதுடன் சாலையில் ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என எழுதிக் கொண்டும் இருந்தாராம்.

அப்போது, அருகேயுள்ள மாதவச்சேரியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சந்திரசேகரன் (24) மற்றும் அவரது நண்பா்கள் மோட்டாா் சைக்கிளில் செம்படாகுறிச்சிக்கு கட்டை, சைக்கிள் செயின், கத்தி ஆகியவற்றுடன் கூச்சலிட்டவாறு சென்றனராம். இதை தட்டிக் கேட்ட சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் சந்திரசேகரன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, சுந்தர்ராஜனை சந்திரசேகரன் உள்ளிட்டோா் ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டி தாக்கினராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்து, வீட்டு ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், 11 போ் மீது கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரன் (24), ஆனியன் மகன் மருதை (27), மகாதேவன் மகன் சிவா (23), அழகப்பன் மகன் பாண்டியன் (18), அம்மாபேட்டையைச் சோ்ந்த குமாா் மகன் மோகன் (23), ஆறுமுகம் மகன் விக்னேஷ் (19) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com