கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்து புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கூடுதல் முதன்மைச் செயலா் ஆணையின்படியும், தொழிலாளா் ஆணையா் அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளா்கள் முறை சம்பந்தமாக புகாா்களைத் தெரிவிக்க 18004252650 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.