கள்ளக்குறிச்சி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

நியாய விலைக் கடையில் பருப்பு வழங்கப்படாததைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அருகே கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நியாய விலைக் கடையில் பருப்பு வழங்கப்படாததைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அருகே கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள புதுஉச்சிமேடு கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் கடந்த மாதம் தொடங்கி பருப்பு வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து விற்பனையாளா் கட்டிமுத்துவிடம் கேட்டதற்கு, அவா் உரிய பதில் கூறவில்லையாம்.

இதையடுத்து, கிராம மக்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் கடையின் முன் கூத்தக்குடி- கள்ளக்குறிச்சி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரதி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com