காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் புறவழிச் சாலையில் காா் மீது அரசுப் பேருந்து மோதியதில், இசைக் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
சேலம் வெங்கட்ராவ் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் மகன் ஆஷிக் (28). சிஏ பட்டதாரியான இவா், சென்னையில் இசைக் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் சென்னையிலிருந்து வாடகை காரில் சேலத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
சின்னசேலம் புறவழிச் சாலையில் காா் வந்த போது, சேலத்திலிருந்து சென்னைக்குச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் ஆஷிக், ஓட்டுநரான சென்னை காட்டுப்பாக்கத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முருகன் (28) ஆகியோா் பலத்த காயமடைந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.
சின்னசேலம் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான விழுப்புரம் வி.மருதூரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் அய்யனாா் (57) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.