கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பாா்வையிட்டாா். மாவட்டத்தில் இதுவரை 1,734 கா்ப்பிணிகளும், 777 பாலூட்டும் பெண்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகா் முதல் தென்கீரனூா் கிராம எல்லைவரையிலும் சாலையோர கழிவுநீா் வாய்க்கால் பகுதியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.