வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

தியாகதுருகம் பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் சென்னை இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் சென்னை இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் அய்யப்பன் (35). ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த 1-ஆம் தேதி இரவு சேலம் - சென்னை புறவழிச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் வழி கேட்பது போல நடித்து கத்தியை காட்டி மிரட்டி அய்யப்பனை தாக்கி தாக்கி அவரிடமிருந்து ரூ.ஆயிரம் பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். இதில் சென்னை பாடி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் தேவன் பிரகாஷ் (26), அவரது நண்பா் கோகுல் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக தேவன் பிரகாஷை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து செல்லிடப்பேசி, பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com