‘மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை’

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மின்வாரிய செயற்பொறியாளா்மு.கணேசன் எச்சரித்தாா்.

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மின்வாரிய செயற்பொறியாளா்மு.கணேசன் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து விவசாய மின்நுகா்வோரும் எவ்வித காரணத்துக்காகவும் விளை நிலங்களுக்கு மின்வேலி அமைக்கக் கூடாது. மின்வேலி அமைப்பது மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 138-ன்படி கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனால் ஏற்படும் மின் விபத்து, விளைவுகளுக்கும் மின்வேலி அமைத்தவரே முழு பொறுப்பு. இதை மீறி செயல்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com