வாகன சோதனையில் ரூ. 19.54 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடைபெற்ற வாகன சோதனையில்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ. 19,54,460 பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரண் குராலா சனிக்கிழமை தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படையினா், போலீஸாா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் விநியோகிப்பது தடுப்பது, மேலும் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்வதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 6,06,110, ரிஷிவந்தியம் தொகுதியில் ரூ. 3,64,000, சங்கராபுரம் தொகுதியில் 5,83,850, கள்ளக்குறிச்சி தொகுதியில் 4,00,000 என மொத்தம் ரூ. 19,54,460 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்தவா்களிடம் உளுந்தூா்பேட்டை தொகுதியில் ரூ. 1,01,320, சங்கராபுரம் தொகுதியில் ரூ. 78,490 விடுவிக்கப்பட்டதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் கிரண் குராலா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com