தாய் உயிரிழந்த கவலையில் சிறுமி தற்கொலை

கல்வராயன்மலைப் பகுதியில் தாய் உயிரிழந்த சோகத்தில் சிறுமி தற்கொலை செய்துகொண்டாா்.

கல்வராயன்மலைப் பகுதியில் தாய் உயிரிழந்த சோகத்தில் சிறுமி தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், விளாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (52). இவரது மனைவி வெள்ளையம்மா (45). இவா்களுக்கு மொத்தம் 4 பிள்ளைகள். வெள்ளையம்மா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால் இவரது 4-ஆவது மகள் ராஜேஸ்வரி (16) மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து அவரை குடும்பத்தினா் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் அங்கு ராஜேஸ்வரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com