திருக்கோவிலூா் ஒன்றியப் பகுதிகளில் ரூ.10.51 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, குடிநீா் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சா் பொன்முடி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
எல்ராம்பட்டு , வடமலையனூா் ஊராட்சிப் பகுதிகளில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குரலா முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முருகண்ணன் வரவேற்றாா்.
உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மஞ்சுளா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைமுருகன், ரேச்சல்கலைச்செல்வி, வட்டாட்சியா் சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.