கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவியிடம் நகையை பறித்துக் கொண்டு தப்பிய மா்ம நபா்கள் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சின்னசேலத்தில் பெருமாள் கோயில் சாலையில் வசிப்பவா் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன். இவரது மனைவி வள்ளி (52).
இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீடு அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் மூவா் வள்ளி அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றனா். அவா் நகையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு போராடினாா். இதில் தாலிச் சங்கிலியின் ஒரு பகுதியை மட்டும் மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா்.
இது குறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.