கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 30,510-ஆக உயா்ந்தது.
இதனிடையே மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 205-ஆக அதிகரித்தது.
இதுவரை 29,992 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் 313 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.